WhatsApp Image 2022 04 02 at 3.59.07 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கொள்கை அரசியலுக்கே முதலிடம்!! – ஜீவன்

Share

” மலையகத்திலுள்ள அமைச்சர்களுக்கும் முதுகெலும்புள்ளது என்பதை, பதவி துறந்து நாம் காண்பித்துவிட்டோம். சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் கொள்கை அரசியலே முக்கியம். அந்த வழியில்தான் பயணிக்க வேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை மற்றும் அதற்கான தீர்வு பொறிமுறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (07) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.

அத்துடன், மக்களின் தீர்ப்பே காங்கிரஸின் தீர்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து தீர்வை காண வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதில் பயன் இல்லை எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

” நாம் மக்களுக்காக அபிவிருத்திகளை செய்துள்ளோம். உறுதிமொழிகளை வழங்கியுள்ளோம். ஆனால் சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலை தாண்டி கொள்கை அரசியலுக்கு மாறியாக வேண்டிய தருணமிது.

” வன்முறையின்றி ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களை இ.தொ.கா. ஆதரிக்கும். மக்களுக்கு தமது உள்ளக்குமுறல்களை வெளியிட சுதந்திரம் உள்ளது. எனினும், தலவாக்கலையில் இன்று நடைபெற்ற கூட்டம், கட்சி கூட்டமாக நடத்தப்பட்டுள்ளது. கவலையை வெளியிட மக்களை வைத்து, சஜித்துக்கு பிரச்சாரம் செய்துள்ளனர். இது தவறாகும். ” – என்று கடும் விசனத்தை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...