tamilni 462 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து பொலிஸ் உயரதிகாரிக்கு கொலை மிரட்டல்

Share

வெளிநாடொன்றிலிருந்து பொலிஸ் உயரதிகாரிக்கு கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்தமை குறித்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் கம்பஹா பொலிஸார் கைது செய்திருந்தனர்.

“நீ எங்களது நண்பர் ஒருவரை கைது செய்திருக்கின்றாய், கூடுதலாக ஆடாத, உனது உயிர் குறித்து அவதானத்துடன் இரு” என தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...