Lindulai 04
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டத்தில் குதித்த தோட்டத்தொழிலாளர்கள் (படங்கள்)

Share

தலவாக்கலையில் 300 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலவாக்கலை – பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

Lindulai 05

மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தியதுடன், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

Lindulai

தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி உள்ளதாகவும், கொழுந்து விளைச்சல் குறைவாக உள்ள நிலையில் தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ தேயிலையைக் கட்டாயமாகப் பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாகவும், போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Lindulai 01

தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை எனவும் தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Lindulai 03

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...