17
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் நடவடிக்கை

Share

குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் நடவடிக்கை

முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புற்றுநோய் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சுகவீன கொடுப்பனவு சுமார் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உதவித் தொகையை 5,000 ரூபாவாக உயர்த்தி திருத்தப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய, வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் அநீதிக்கு உள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...