phi 2
இலங்கைசெய்திகள்

3ஆவது டோஸாக பைஸர்!

Share

மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட , நாட்பட்ட நோய் உடைய 30–60 வயதுக்குபட்டவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சினோபார்ம் தடுப்பூசியால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கொரோனாத் தொற்றால் இறந்தவர்களில் 19 சதவீதமானவர்கள் இரு டோஸ்களையும் பெற்றவர்களே எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி இந்தக் கோரிக்கைக்கு அமைவாக மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...