சரத் பொன்சேகா
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா அரசை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம்! – பொன்சேகா ஆரூடம்

Share

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி இரவு பகல் பாராது மக்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், ஜனாதிபதியும், அரசும் பதவி விலகாமல் அதிகாரத் திமிருடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு வெட்கக்கேடான செயலாகும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் பொன்சேகா எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனக்கு 69 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்தது என்ற இறுமாப்புடன் ஜனாதிபதி கோட்டாபய பதவியில் அமர்ந்திருக்கின்றார். அதேவேளை, தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உண்டு என்ற திமிருடன் அரசு செயற்படுகின்றது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைக் கூட இந்த அரசு இழந்துவிட்டது. அதேவேளை, ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய மக்களும் இன்று அவருக்கு எதிராகக் களமிறங்கிப் போராடி வருகின்றனர்.

பதவி ஆசையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கமாட்டார்கள். மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் அவர்களுக்குத் தூசு போல் தென்படலாம்.

ஆனால், நாளாந்தம் வலுப்பெறும் மக்கள் போராட்டங்கள், ஜனாதிபதியையும் அரசையும் விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...