Mahindanatha aluthkamake
அரசியல்இலங்கைசெய்திகள்

வயிறு மற்றும் வருமானம் பற்றி மட்டுமே மக்கள் சிந்திக்கின்றனர் ! – கூறுகிறார் மஹிந்தானந்த

Share

” வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு அரசு தடுப்பூசிகளை வழங்கியது. அதனால்தான் இன்று எவ்வித அச்சுறுத்தலும் இன்றி போராட்டங்களை நடத்தமுடிகின்றது. இதற்கு காரணம் அரசுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். ஏப்ரல் முதலாம் திகதிக்குள் சமையல் எரிவாயு பிரச்சினை தீர்ந்துவிடும். அதன்பின்னர் எரிபொருள் பிரச்சினையும் தீரும். தற்போதைய நிலைமை என்பது தற்காலிகமானது, எனவே, வயிறு மற்றும் வருமானம் குறித்து மட்டும் மக்கள் சிந்திக்கக்கூடாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...