16 7
இலங்கைசெய்திகள்

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

Share

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) – கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் (18.12.2024) தினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன், பூட்சிற்றி முகாமையாளர்களிற்கு எதிராக நேற்றையதினம் (06.01.2024) வழக்கு தாக்கல் செய்தார்.

மேலும், வழக்கினை அன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் முகாமையாளர்களிற்கு 60,000/=, 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன் கடுமையான எச்சரிக்கையையும் வழங்கியுளடளார்.

Share
தொடர்புடையது
விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

exam hall
இலங்கை

தொடரும் காலநிலை சீர்கேடுகள் – திட்டமிடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்.

தொடரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை...

அகில விராஜ் காரியவசம் 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்றைய...

சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...