Katunayake Airportee
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் பி.சி.ஆர் சோதனை!

Share

இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆய்வகம்  ஒவ்வொரு மணிநேரமும் 500 சோதனைகள் அடங்கலாக நாளாந்தம்  7 ஆயிரம் சோதனைகளை மேறகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சோதனைகளின் முடிவுகள் 3 மணிநேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

அத்துடன் சுற்றுலாப் பணிகள் சாதகமான சோதனைகளை முடிவுகளை அளித்து கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டிருந்தால் தனிமைப்படுத்தல் செயற்முறைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பிசிஆர் சோதனைகளுக்கு 40 டொலர் செலுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...