1 32
இலங்கைசெய்திகள்

இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம்

Share

இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம

இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை-இந்திய கப்பல் சேவையானது ஜனவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை இடையே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கப்பல் சேவை, கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் காரணமாக சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 2023ம் ஆண்டு பல்வேறு தரப்பினரின் பலத்த முயற்சி காரணமாகக் குறித்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமானது. எனினும் வட-கிழக்கு பருவமழை காரணமாக சமீப நாட்களாக குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி தொடக்கம் இலங்கை-இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவுகள் டிசம்பர் 25ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...