Arrested 611631070
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பசறையில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு! – 13 பேர் கைது

Share

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்புகளின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், போதை மாத்திரைகளுடன் மூவரும், நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நால்வரும், பொது இடத்தில் குடிபோதையுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இருவரும், பொது இடத்தில் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட ஒருவருமாக 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம். விஜயரட்ணவின் வழிகாட்டலின் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 5
இலங்கைசெய்திகள்

மன்னாரில் ஒரு வாரத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை: பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 3) முதல் ஒரு வார காலத்திற்கு மாட்டிறைச்சி, ஆடு மற்றும்...

image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...