Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

6ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்று!

Share

நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டத்தொடரில் வாய்மூல விடைக்கான கேள்விகள் முதன் முதலில் கேட்கப்படும் சந்தர்ப்பமாக இது அமைகிறது.

எதிர்வரும் 6ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் 10.45 மணி வரை சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.45 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சி கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய “இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்” குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 7ஆம் திகதி “இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்” தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாவது நாளாக காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் 11.00 மணி வரை கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டு (130,131) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். இதன் பின்னர் 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை நடைபெறவிருப்பதாக செயலாளர்நாயகம் குறிப்பிட்டார்.

இதேவேளை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...