அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது இழுவைப்படகையும் கைப்பற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில்
ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையிலேயே, தமிழகத்தின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இவர்களை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment