யாழ் பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்

யாழ் பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

Share

யாழ் பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

யாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் பளுத்தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.

கேகாலை- பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், நேற்று முன்தினம் (01.07.2023) இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடத்தியது.

இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.

அந்தவகையில் வி.ஜெஸ்மினா என்ற மாணவி 18 வயதுப்பிரிவில் 71கிலோ எடைப்பிரிவில் 92 கிலோகிராம் தூக்கி தங்கப்பதக்கத்தையும், இ.ரம்யா என்ற மாணவி 20 வயதுப்பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் 65 கிலோகிராம் தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்கள்.

யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித்தந்த இந்த மாணவிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...

ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...

Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...