சேதன பசளை உற்பத்தி
இலங்கைசெய்திகள்

சேதனப்பசளை உற்பத்தி – விவசாயிகளுக்கு நிதி

Share

நாட்டில் சேதனப்பசளை உற்பத்திக்காக இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என விவசாய இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கால நிலை மாற்றத்துக்காக தீர்வு மற்றும் பசுமை பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சு உபகுழுவின் மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், உர உற்பத்திக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற 12,500 ரூபா கொடுப்பனவுவில் 7500 ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் விவசாயிகளுக்கு 1000 மில்லியன் ரூபாவுக்கு அதிக தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு தேவையான சேதனப்பசளையை தட்டுப்பாடு இன்றி வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய களைநாசினிகளின் தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...