எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கைசெய்திகள்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Share

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சுற்றுலா விசாவில் இந்தியா சென்று திருமணம் முடித்த இலங்கை பெண் ஒருவரை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை காதலித்துள்ளார்.

இந்நிலையில், லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும், இந்த திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...