sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்!!

Share

தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் நோக்கில்  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பல சட்டங்கள் குடிமக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மீறுவதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன்,  அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிய தீர்மானித்தன.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பகீர் மார்க்கர், சந்திம வீரக்கொடி, கலாநிதி நாலக கொடஹேவா, உதய கம்மன்பில, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, வீரசுமண வீரசிங்க, கஜேந்திர பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, கெவிது குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...