எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது!

jaffna 4

வடமாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது என வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உப தலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வாய்ப்புகள் இக் கண்காட்சி மூலமாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இளைஞர்கள், யுவதிகள் பயிற்சிக் கூடத்திற்கு சென்றால் அவர்களது முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ள இயலுமென வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் ந.நந்தரூபன் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version