image 67b00ccbf7
இலங்கைசெய்திகள்

நாட்டில் சிறப்பு வர்த்தக கணக்குகள் திறப்பு

Share
இலங்கையைச் சேர்ந்த வங்கிகளால், வோஸ்ட்ரோ கணக்குகள் எனப்படும் சிறப்பு ரூபா வர்த்தகக் கணக்குகளைத் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

11 இந்திய வங்கிகளில் 18 வெளிநாட்டு வங்கிகளால் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டு வங்கிகள் குறித்த கணக்குகளை திறந்துள்ளதாகவும் இந்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு அடுத்த படியாக இந்திய ரூபாயைப் பயன்படுத்தும் குறித்த கணக்குகளை மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்டு வங்கிகளும் திறந்துள்ளன.

இந்திய ரூபாயை இலங்கையில் வெளிநாட்டு நாணயமாக நியமிப்பதற்கான இந்திய மத்திய வங்கியின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கிஅறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சார்க் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய மத்திய வங்கியிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வருடம் ஜூலை மாதம் முதல், டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை, ரூபா பரிமாற்ற பொறிமுறைக்குள் கொண்டு வர இந்திய அரசாங்கம் முயன்று வரும் நிலையில், இலங்கையர்களும் இந்தியர்களும் ஒருவருக்கொருவர் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய அளவான அமெரிக்க டொலர் கிடைக்காத நிலையில் இந்திய ரூபாயை இலங்கையில் சட்டப்பூர்வ வெளிநாட்டு நாணயமாக நியமிப்பது, நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதுடன், நாட்டுக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...