rtjy 8 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் முறைகள் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை

Share

ஒன்லைன் முறைகள் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒன்லைன் முறைகள் மூலம் உடனடி கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிறுவனங்களில் உடனடி கடன் பெற்ற சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான முறையில் பணம் பெற்றவர்கள் நாளாந்தம் வட்டி செலுத்த முடியாத உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையவழி முறைகள் மூலம் கடன் பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் வகையில் நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...