ஒன்லைன் மூலம் நடைபெறவுள்ள யாழ்.பல்கலையின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முழுமையான நிராகரிக்கிறோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், யாழ்.பல்கலைக் கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 16ஆம் 17 ஆம்18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்ரோபர் 7ஆம் 8ஆம் 9ஆம் திகதிகளில் நடத்த பிற்போடப்பட்டது.
எனினும் சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ஆம் திகதி ஒன்லைன் மூலம் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழா நடத்துமாறும் கோரியுள்ளனர்.
Leave a comment