24 6635d8be831e2
இலங்கைசெய்திகள்

இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள்

Share

இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள்

இணையவழி மூலம் சந்தேகத்துக்குரியவர்களை நீதிமன்றங்களில் தொலைதூரத்தில் இருந்தே முன்னிலைப்படுத்துவதற்கு வசதியாக நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் நிகழ்வுகள் இன்று (04.05.2024) தென் மாகாணத்திலுள்ள (Southern Province) மூன்று சிறைச்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட இந்த நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் அகுனுகொலபெலஸ்ஸ, மாத்தறை (Matara) மற்றும் காலி (Galle) சிறைச்சாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள நடமாடும் நீதிமன்றப் பிரிவு, இன்று காலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...