666
இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

Share

வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் வாடியில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கி உள்ளது.

இதன்போது போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான (வயது–35) ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என இனங்காணப்பட்டுள்ளார்.

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

vsfs

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...