மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.
இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹொட்டல்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அக் கால அவகாசம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், மின் கட்டண சலுகை தொடர்பில்,ஹொட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை வழமைக்குக் கொண்டுவர மேலும் சில மாதங்கள் தேவை – என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment