elec
இலங்கைஅரசியல்செய்திகள்

மின் கட்டணங்களுக்கு சலுகை?

Share

மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹொட்டல்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அக் கால அவகாசம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண சலுகை தொடர்பில்,ஹொட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை வழமைக்குக் கொண்டுவர மேலும் சில மாதங்கள் தேவை – என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...