Dinesh Gunawardena
இலங்கைசெய்திகள்

உள்ளாட்சி தேர்தல் குறித்து பதற்றப்பட வேண்டியதில்லை!

Share

” உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சட்டத்துக்குட்பட்ட வகையில் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் எதிரணிகள் பதற்றப்பட வேண்டியதில்லை.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” தற்போது செப்டம்பர்மாதம் தான் ஆகின்றது. இன்னும் காலம் உள்ளது. எதிரணிகள் இன்று கலக்கடைந்துள்ளன. அவ்வாறு பதற்றமடைய வேண்டியதில்லை. உரிய நேரத்தில், உரிய வகையில் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிரணிகளின் அவசரத்துக்காக தேர்தலை நடத்த முடியாது, அதற்கான நடைமுறைகள் உள்ளன.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்: மேலாளர்கள் உட்பட பலர் கைது என அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட மூன்று...

world 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி: 10 இடங்களை முதன்மைப்படுத்த மாவட்ட செயலகம்

திட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்...

world 36
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தொடரும் கனமழை: 5 மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்த்தளத் தளம்பல் நிலை (Low-level atmospheric disturbance) காரணமாக, நாட்டின்...

world 35
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உதய கம்மன்பிலவுக்கு பொலிஸ் அழைப்பாணை: ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து விசாரணை

தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, எதிர்வரும் மே...