Dinesh Gunawardena
இலங்கைசெய்திகள்

உள்ளாட்சி தேர்தல் குறித்து பதற்றப்பட வேண்டியதில்லை!

Share

” உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சட்டத்துக்குட்பட்ட வகையில் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் எதிரணிகள் பதற்றப்பட வேண்டியதில்லை.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” தற்போது செப்டம்பர்மாதம் தான் ஆகின்றது. இன்னும் காலம் உள்ளது. எதிரணிகள் இன்று கலக்கடைந்துள்ளன. அவ்வாறு பதற்றமடைய வேண்டியதில்லை. உரிய நேரத்தில், உரிய வகையில் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிரணிகளின் அவசரத்துக்காக தேர்தலை நடத்த முடியாது, அதற்கான நடைமுறைகள் உள்ளன.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...