mahinda e1649687958337
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த ஒய்வு பெற்றிருந்தால் துன்பப்பட வேண்டியதில்லை! – கூறுகிறார் சமல்

Share

” ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகித்த பிறகு, மஹிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இன்று எல்லா வழிகளிலும் துயரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.”

இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசியலில் ‘விட்டுக்கொடுப்பு’ களை செய்யவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும், மாறாக பதவி ஆசையில் மூழ்கினால், இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கவும் நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

” 1931 இல்தான் ராஜபக்சக்களின் அரசியல் பயணம் ஆரம்பமானது. சொத்துகளை அடகுவைத்துதான் அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு அடகு வைத்த சொத்துகளை மீள பெறமுடியாமலும் போனது. அன்று முதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதால்தான் அரசியலில் நீடிக்க முடிகின்றது.

தனது 50 வருடகால அரசியல் வாழ்வில் மஹிந்த ராஜபக்ச பல தியாகங்களை செய்துள்ளார். இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்த பிறகு, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்யாததால்தான் இன்று எல்லாவித துன்பங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

எனவே, உரிய நேரத்தில் விடைபெறுவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும்.” எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...