maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுடன் இனி எந்த உறவும் கிடையாது! – நாம் மக்கள் பக்கமே என்கிறார் மைத்திரி

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சாந்த பண்டார என்னிடம் எதுவும் கலந்துரையாடவில்லை. ஏன்! தொலைபேசி வாயிலாகக்கூட உரையாற்றவில்லை. தனது அரசியல் வாழ்க்கையை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்.

ராஜபக்சக்களுடன் எமக்கு இனி தொடர்பு – உறவு கிடையாது. கடிதம் அனுப்பினோம், யோசனைகளை முன்வைத்தோம். ஆனால் மாறுவதாக தெரியவில்லை.

எனவே, ராஜபக்சக்களை வெளியேற கோரி போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம். ” – என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...