maithri
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிவில் மாற்றமில்லை! – சுதந்திரக்கட்சி விடாப்பிடி

Share

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் சபையில் அறிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியை சந்திப்பதால் அக்கட்சியின் முடிவு மாறக்கூடும் என்ற தகவல் வெளியானது. எனினும், மேற்படி முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என சந்திப்பின் பின்னர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அவசரகால சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...