Tissa Attanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் எந்த மாற்றமும் இல்லை!

Share

இலங்கையின் அரசியல் புலத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட வில்லை, தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார்.

கண்டியில் நடந்த வைபவம் ஒன்றை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந் 9ம் திகதி நடந்த சம்பவங்களை அடுத்து அரசியலில் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து புதிய போத்தலில் பழைய மதுவை ஊற்றி கதைதான் நடந்து வருகிறது.

நிதி அமைச்சை பிரதமர் பொறுப் பேற்ற போதும் ஏனைய அமைச்சர்கள் ஏற்கனவே இருந்த அமைச்சர்கள்தான் தொடர்ந்தும் உள்ளனர். அதே அமைச்சர்களும் அதிகாரிகளும் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஒரு ட்ரிலியன் பணம் புதிதாக அச்சிட உள்ளதாக நிதி அமைச்சர் முதலாவதாக அறிவித்துள்ளார். இது நல்ல சகுனம் அல்ல. மேலும் மேலும் பணவீக்கம் ஏற்பட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு நிலையேயாகும். புதிதாக பணம் அச்சிட்டு அரசாங்கத்தை நடத்துவது என்பது எவராலும் செய்ய முடிந்த காரியமாகும். அதற்கு ஆட்சியையோ பாராளுமன்றமோ அமைச்சுக்களோ தேவையில்லை.

இன்னும் பழைய ஆட்சியாளர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளே நடக்கின்றன.

நாடும் நாமும் எதிர்பார்த்தது அரசியல் அமைப்பில் 19 பிளஸ் திருத்தத்தையாகும். அதாவது 19 வது திருதத்தை விடவும் சக்தி மிக்க ஒன்றை எதிர்பாத்த்தோம் . ஆனால் உத்தேச 20 வது திருத்தம் அப்படி எதையும் திருப்திப்படுத்துவதாக இல்லை.

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதை எதிர்பார்த்தனர். அது நடப்பதாக இல்லை. 21ம் திருத்தத்தில் நல்ல அம்சங்கள் இருப்பின் நாம் அதை ஆதரிப்பதில் பிரச்சினை இல்லை.

ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார முதலானோர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தக்க நியாயம் தெரிவிக்காத பட்சத்தில் அவர்கள் கட்சியால் ஒழுக்காற்று விசாரணைக்கு உற்படுத்தப்படுவர் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...