ஸ்ரீபால டி சில்வா
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் நிமல் மற்றும் மஹிந்த

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சுதந்திரக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்திலும், கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் எதிர்கால வியூகம் தொடர்பான கலந்துரையாடலிலும் இவ்விருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றதால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக்கட்சி அறிவிப்பு விடுத்திருந்தது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் கட்சி செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...