ஸ்ரீபால டி சில்வா
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் நிமல் மற்றும் மஹிந்த

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சுதந்திரக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்திலும், கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் எதிர்கால வியூகம் தொடர்பான கலந்துரையாடலிலும் இவ்விருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றதால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக்கட்சி அறிவிப்பு விடுத்திருந்தது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் கட்சி செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...