ஸ்ரீபால டி சில்வா
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் நிமல் மற்றும் மஹிந்த

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சுதந்திரக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்திலும், கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் எதிர்கால வியூகம் தொடர்பான கலந்துரையாடலிலும் இவ்விருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றதால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக்கட்சி அறிவிப்பு விடுத்திருந்தது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் கட்சி செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...