13 21
இலங்கைசெய்திகள்

செம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டி : பாகிஸ்தானை தோற்கடித்த நியூஸிலாந்து

Share

செம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டி : பாகிஸ்தானை தோற்கடித்த நியூஸிலாந்து

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று (19) நியூஸிலாந்து அணி, 60 ஓட்டங்களால் பாகிஸ்தானிய அணியை தோற்கடித்துள்ளது.

கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, தமக்கான 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றது.

இதில் வில் யொங் 107 ஓட்டங்களையும், டொம் லத்தொம் 118 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 260 ஒட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் 60 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானிய அணிக்காக பாபர் அசாம் 64 ஓட்டங்களையும், குஸ்தில் சா 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதேவேளை இன்று போட்டித்தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் களமிறங்குகின்றன.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...