31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

Share

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இன்று (22.05.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை இன்று முதல் தொடங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் குருநாகல் மற்றும் மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் இடங்களில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம்.

இதற்கமைய, 35 இன்டர்சேஞ்ச்களிலும் 119 வெளியேறும் வாயில்களிலும் இதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...

28 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான...