இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அறிமுகமாகும் வரி
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அறிமுகமாகும் வரி

Share

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அறிமுகமாகும் வரி

இலங்கையில் புதிய வரி ஒன்றை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கப்பம் பெறுதல், பாதாள உலகம், திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய கடத்தல்காரர்களின் பணம் மற்றும் பிற சொத்துக்களுக்கு வரி அறவிடுவதற்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்களுக்கு வரி வசூலிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது, ​​இந்த முறையற்ற சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய வரி அறவீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​சட்டவிரோத சொத்துக்களை குவித்துள்ள 8000 பேர் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் தகவல்களை சேகரித்துள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட 8000 பேரின் சொத்துகளை சரிபார்த்து அவர்களிடமிருந்து முதலில் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வரித் திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்ப முடிவுகளை எடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...