ggg 1
இலங்கைசெய்திகள்

அரிசிக்கு புதிய விலைகள்!

Share

அரசாங்கத்தால் அரிசிக்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் 3 வகை அரிசிகளுக்குமான புதிய விலையை அறிவித்துள்ளது.

இதனை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 165 ரூபாவாவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடமிருந்து நாட்டரிசி கிலோ 62.50 ரூபாவுக்கும் சம்பா கிலோ 70 ரூபாவுக்கும் கீரி சம்பா கிலோ 80 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடிவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை நீக்கி அரிசி தட்டுப்பாட்டை நீக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...