Parliment in one site 800x534 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சர்கள் விரைவில் நியமனம்

Share

தான் உட்பட 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த மாதத்தி் புதிய நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொகுகே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க மற்றும் தானும் முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் அடங்குவதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....