2 34
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

Share

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டள்ளார்.

ஜயந்த லால் ரத்னசேகர கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

ஜயந்த லால் ரத்னசேகர தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வி கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து இவர், ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில்(Peoples’ Friendship University of Russia )1988 இல் வேதியியலில் கலைமானி பட்டம் பெற்றதை தொடர்ந்து, 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், 1988 இல் வேதியியலில் கலைமானி பட்டம் பெற்றதை தொடர்ந்து, 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

ரத்னசேகர 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்தார்.

மேலும் 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

இதனை தொடர்ந்து அவர், 2017 ஜனவரியில் இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

மேலும், 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் ஆராய்ச்சி தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...