gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

இவ் வாரத்துக்குள் புதிய அரசு! – ஜனாதிபதி தெரிவிப்பு

Share

” இவ் வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். ” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ராஜபக்சக்கள் இல்லாத, இளம் உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.

அதேபோல பிரதமர் பதவி விலகியதும், அமைச்சரவையும் கலைந்தது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க இதன்மூலம் இடமளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.

இவ் வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுள்ள, மக்களின் நம்பிக்கையை வெள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக்குவேன். அமைச்சரவையும் நியமிக்கப்படும்.

நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்.

ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். புதிய அரசு, நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அந்த கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்க தயார்.” – என்றார்.

#SriLankNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...

12879419
செய்திகள்அரசியல்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1,550 ஆக உயர்வு: சுகாதார மேம்பாட்டிற்கு ரூ. 31,000 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து...

STK022 ELON MUSK CVIRGINIA F
செய்திகள்உலகம்

உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு: எலான் மஸ்க்கின் ரூ. 1 ட்ரில்லியன் ஊதியக் கோரிக்கைக்கு டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தனக்கு 1 ட்ரில்லியன் டாலர்...

digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக...