tamilnif 4 scaled
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம்

Share

போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம்

கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து கொண்டு செல்லும் போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய முறை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும், இவ்வாறு போதைப்பொருளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்த்துள்ளதாகவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹஹேன – ஒலுபொடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் போது போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்லும் முறையினை வெளிப்படுத்தியதாகவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையதிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் 33 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகத்திற்கு இடமின்றி பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் பொதிகளை விநியோகித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...