24 6637173691264
இலங்கைசெய்திகள்

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

Share

கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு

பழைய கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் புதிய கடன்களை பெற வேண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

வரி வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், கடனை செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அரசாங்கத்தின் பழைய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 2455 பில்லியன் ரூபாய் தேவைப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்தக் கடன்களைத் தீர்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தினால் 2282.3 பில்லியன் ரூபா புதிய கடனாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1787 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாகவும் 494 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் கீழ், மாநில வரி வருவாய் 55.4 சதவீதம் அதிகரித்து 2720 பில்லியன் ரூபாவாக உள்ளது.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பொதுக் கடன் அளவு 114 சதவீதத்திலிருந்து 103 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...