download 5
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Share

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் (Full face Hemmet) அணிவது தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறைகளுடன், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பான சட்டத் தளர்வு தொடர்பிலும் வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158வது பிரிவின் கீழ், 2022,ஜூலை 7, அன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரால், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகளுடன் புதிய வர்த்தமானி அறிவிப்பு (2287/28) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த தலைக்கவசங்கள், இலங்கை தரநிலை விவரக்குறிப்பின் வகை B பாதுகாப்பு தலைக்கவசங்கள் அல்லது அவ்வப்போது பாதுகாப்பு தலைக்கவசங்களுக்கு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் தரநிலைகளாக வகைப்படுத்தப்பட வேண்டும்.அத்தகைய பாதுகாப்பு தலைக்கவசம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட SLS தயாரிப்பு சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும்.

அந்த ஹெல்மெட்கள் அவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக்கக் கூடாது.
பாதுகாப்பு தலைக்கவசங்களில் அதிர்ச்சியை உறிஞ்சும் லைனர், சின் ஸ்ட்ரொப், பஃபர் பேடிங் மற்றும் ஹெட் பேண்ட் ஆகியவை இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், குற்றத்தடுப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி அல்லது சிறிலங்கா இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...