maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

மாற்றப்பட வேண்டியவர் பிரதமரே! – அமைச்சரவையை ஏற்க முடியாது என்கிறது சுதந்திரக்கட்சி

Share

பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

15 பேருடன் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.

ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும், சரத் வீரசேகர, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அமைச்சரவை நியமனத்தை சுதந்திரக்கட்சி எதிர்த்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு மலரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

#SriLanka News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...