maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

மாற்றப்பட வேண்டியவர் பிரதமரே! – அமைச்சரவையை ஏற்க முடியாது என்கிறது சுதந்திரக்கட்சி

Share

பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

15 பேருடன் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.

ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும், சரத் வீரசேகர, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அமைச்சரவை நியமனத்தை சுதந்திரக்கட்சி எதிர்த்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு மலரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

#SriLanka News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...