புத்ததாசன மத மற்றும் கலாசார அமைச்சரும் நாட்டின் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
கொவிட் 19 தொடர்பில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோருடன் இந்தப் பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் இந்த வழிபாடுகளில் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியம் சுவாமி பங்குபற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment