tamilni 341 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

Share

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பதை நடராஜன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நல்லூர் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு,அவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. எனினும் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அப்போது அங்கு 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என்று ஏ.நடராஜன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதராக ஏ.நடராஜன், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்தநிலையில் அவர், ‘From the Village to the Global Stage’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த நூல் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...