image 6483441 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘நந்தி’ நினைவுப் பேருரை 30 இல்!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடாத்தப்படும் நினைவுப் பேருரைகளின் வரிசையில் சமுதாய மருத்துவத் துறையின் வாழ்நாள் பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீடாதிபதியும், ‘நந்தி’ என எழுத்துலகில் அறியப்பட்டவருமான பேராசிரியர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் நினைவுப் பேருரை எதிர்வரும் 30 ஆம் திகதி, புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள ஹூவர் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் “சமுதாயத்துடன் தொடர்புபட்ட மருத்துவக் கல்வி : எதிர்கால நோக்கும், சவால்களும்” என்ற தலைப்பில் மருத்துவ பீடாதிபதி வைத்தியர் இரா. சுரேந்திரகுமாரன் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...