Sri
இலங்கைசெய்திகள்

பெயர் மாற்றமே அழிவுக்கு காரணம்!!

Share

பெயர் மாற்றமே அழிவுக்கு காரணம்!!

சிலோன் என்ற பெயரிலிருந்து ஸ்ரீ லங்கா என இந்நாட்டின் பெயரை மாற்றியது தான் இவ்வளவு காலமாக நாடு அழிவுக்கு உள்ளாவதற்கான காரணம் என விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் வான சாஸ்திரியான அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

“எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாராநாயக்க மற்றும் விஜய குமாரதுங்கவின் படுகொலையிலிருந்து நஷ்டமடைந்த பல நிறுவனங்கள் வரை ஸ்ரீ என்ற சொல் பாரிய அழிவைக் கொண்டுள்ளது. இலங்கையின் இறுதி அரசனின் பெயர் கூட ஸ்ரீ விக்ரமராஜசிங்க தான்“ என அவர் மேலும் விளக்கமளித்தார்.

அரசியல் தலைவர்களின் பெயர், அரசியல் கட்சிகளின் பெயர், அரச நிறுவனங்களின் பெயர் மற்றும் நாட்டின் பெயருக்கு முன் ஸ்ரீ என்ற சொல்லை பாவிப்பது தான் நாட்டை இந்த வங்குரோத்து நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்திலிருந்து எமது நாட்டிற்கு துரதிஷ்டம் வந்தது.

அக்கட்சியை நிறுவிய பண்டாரநாயக்க, வாகன எண் பலகைகளில் ஸ்ரீ எனும் எழுத்தை  சேர்த்தார். பின் நாட்டில் சிங்கள-தமிழ் இனக் கலவரம் தோன்றி பெரும் உயிர் உடைமைடகள் சேதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர் படுகொலை செய்யப்பட்டார்“ என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...