11 5
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்தவினால் நாமலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Share

மகிந்தவினால் நாமலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாமல் ராஜபக்சவின் பல பிரசாரக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த செல்லும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷவின் பிரபலத்தன்மை குறைவடைவதாக தெரியவந்துள்ளது.

இதனால் மகிந்தவின் பங்களிப்பை குறைத்து நாமலின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் மகிந்தவை பிரசார கூட்டங்களில் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் பிரபலத்தன்மை மட்டுமே அதிகரிக்கும் என்பதனால் அது நாமலுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாமலின் பிரபலத்தன்மையும் அதிகரிக்க வேண்டும் மகிந்தவின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதனால் இடைக்கிடையே மகிந்தவை மேடைக்கு எற்றி உரையாற்ற வைப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...