வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இவ் வருடம் நடைபெறமாட்டாது என அறங்காவலர் சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இடம்பெற இருந்த நிலையில் கொரோனாத் தொற்றின் அதிகரிப்பின் அச்சம் காரணமாக செப்ரெம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நாட்டில் தொற்று வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலையில் மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வருடம் மகோற்சவம் இடம்பெறாது என ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment