இந்தியா- தமிழகத்தில் ஈழ அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகக் கடமையாற்றிய 58 வயதான பெண், அவரது 34 வயதான மகளின் உடல்கள் கருகிய நிலையில் நேற்று முன்தினம் (09) மண்டபத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கட்டட பணிகளில் ஈடுபட்டு வந்த இலங்கை அகதிகள் மூவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தமிழகப் பொலிசார் இனங்காணப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 6 ஆம் திகதி கூரான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த குழுவினர், தூக்கத்தில் இருந்த தாயையும் மகளையும் தாக்கிக் கொலை செய்து தடயத்தை மறைக்கும் நோக்கில் உடல்களை தீயிட்டு எரித்துள்ளனர்.
அதற்குப் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மண்டபம் பொலிஸார் உயிரிழந்தவர்களின் வீட்டில் ஊழியர்களாகப் பணியாற்றிய மண்டபம் முகாமில் வசித்த 30 மற்றும் 35 வயதான இருவரே கைதாகியுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவருக்கும் பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment